by Staff Writer 22-11-2018 | 3:41 PM
Colombo (News 1st) திருகோணமலை - கந்தளாய் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு எதிராக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக விவசாயிகள் செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, விவசாயிகள் தம்மைத் தாக்கியதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கந்தளாய் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும், மாவிலாறு விவசாயிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் (20) கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கந்தளாய் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவர் கந்தளாய் வைத்தியசாலையிலும், விவசாயிகள் மூவர் சேருநுவர வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.