by Staff Writer 21-11-2018 | 1:43 PM
Colombo (News 1st) கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு - கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று (21) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
11 இளைஞர்களைக் கடத்திய சந்தேகநபர்கள் அண்ணாச்சி என்ற பாதாளக் குழு உறுப்பினரின் பெயரில் இளைஞர்களின் உறவினர்களைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு கப்பம் கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று மன்றில் அறிவித்தது.
இதற்கிணங்க, தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.