முன்னாள் லெப்டினன்ட் தொடர்ந்தும் விளக்கமறியலில்

இளைஞர்கள் கடத்தல்: சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 21-11-2018 | 1:43 PM
Colombo (News 1st) கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு - கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று (21) ஆஜர்ப்படுத்தப்பட்டார். 11 இளைஞர்களைக் கடத்திய சந்தேகநபர்கள் அண்ணாச்சி என்ற பாதாளக் குழு உறுப்பினரின் பெயரில் இளைஞர்களின் உறவினர்களைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு கப்பம் ​கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று மன்றில் அறிவித்தது. இதற்கிணங்க, தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.