by Staff Writer 21-11-2018 | 5:17 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இது தொடர்பில் வாய்மூல பதில் அளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் அறிவித்தனர்.
இவர்களின் பிணை கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம தெரிவித்தார்.