20 ஆவது அகவையில் சக்தி FM

by Staff Writer 20-11-2018 | 7:26 AM
Colombo (News 1st) நேயர்களின் நாடித் துடிப்பறிந்து முதற்தரமான நிகழ்ச்சிகளைப் படைத்துவரும் சக்தி 20 ஆவது அகவையில் சக்தி FM, தனது 20ஆவது பிறந்ததினத்தை இன்று (20) கொண்டாடுகின்றது. 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி வானொலிகளில் புரட்சிகரமான மாற்றத்துடன் சக்தி  FM உதயமாகியது. நிகழ்சிகளில் மாத்திரமல்லாது மக்கள் சேவையின் மூலமாகவும் நேயர்களின் மத்தியில் ஒரு தனியிடத்தைத் தக்கவைத்திருக்கும் சக்தி FM நேயர்களின் மனங்களை கவர்ந்து தொடர்ந்தும் வெற்றிநடை போடுகின்றது. மக்களுக்குப் பயன்தரும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தளராது ஒலிபரப்பி வருவதுடன், மக்கள் இடர்களுக்கும், அனர்த்தங்களுக்கும் உள்ளாகும்போது, குரல் கொடுப்பதற்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கும் எமது வானொலி ஒருபோதும் தயங்கியதில்லை. இன்றைய பொன்னாளில் சக்தி FM-க்கு நியூஸ்பெஸ்ட் தனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றது. வயது வேறுபாடின்றி அனைவரையும் தனது படைப்பாற்றலால் ஈர்த்துவரும் சக்தி FM-இன் சாதனைப் பயணம் மென்மேலும் உத்வேகம் பெற நியூஸ்பெஸ்ட்டின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.