களைகளிலிருந்து செய்கையை பாதுகாக்க நடவடிக்கை

பாதிப்பை ஏற்படுத்தும் களைகளிலிருந்து செய்கையை பாதுகாக்க நடவடிக்கை

by Staff Writer 20-11-2018 | 9:54 AM
Colombo (News 1st) பெரும்போக செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய களைகளிலிருந்து பயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, விவசாயிகளுக்கு விதைநெல் வழங்கப்படவுள்ளதுடன், ஏனைய உதவி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்நிலங்கள் களைகளால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, தேசிய உணவு ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.