வௌிநாட்டு சிகரட்களுடன் மூவர் கைது

வௌிநாட்டு சிகரட்களுடன் மூவர் கைது

by Staff Writer 18-11-2018 | 3:08 PM
Colombo (News 1st) துபாயிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 69 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய, வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் விமான நிலையத்தில் மூவர் கைது செய்யப்படுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 39 வயதான பெண்ணொருவரும் அடங்குகிறார். அவரின் பயணப்பொதியில் மறைத்து இந்த சிகரெட் தொகையை கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 49 வயதுகளையுடைவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள ஏனைய இரு சந்தேநகபர்களாவர். சந்தேகநபர்களை தடுத்துவைத்து விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.