அரசியல்வாதிகள் செயற்படும் விதம் குறித்து கண்டனம்

பாராளுமன்றில் அரசியல்வாதிகள் செயற்படுகின்ற விதம் குறித்து கண்டனம்

by Staff Writer 18-11-2018 | 9:26 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் எங்களுடைய அரசில்வாதிகள் செயற்படுகின்ற விதம் தொடர்பில் மலையக இந்து குருமார் ஒன்றியம் சார்பாக நாங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொது செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர குருக்கள் கூறியுள்ளார். மலையக இந்து குருமார் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் எங்களுடைய அரசில்வாதிகள் செயற்படுகின்ற விதம் தொடர்பில் மலையக இந்து குருமார் ஒன்றியம் சார்பாக நாங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இந்த அரசியல் சூழ்நிலைக்கு இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியாயமான் தீர்வை வழங்க வேண்டும் எனவும் நாட்டு மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம். நாட்டில் கேவலமான நிலை நடக்கின்றது என பிறநாட்டவர்களுக்கு தென்படுத்தாமல், ஜனாதிபதி சரியான பாதையில் நாட்டை இட்டுச் செல்ல வேண்டும் எனவும் சிவ ஸ்ரீ வேலு சுரேஸ்வர குருக்கள் மேலும் தெரிவித்துள்ளார்.