யாழில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயம்

யாழில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயம் (CCTV)

by Staff Writer 17-11-2018 | 8:00 PM
Colombo (News 1st) யாழ். வடமராட்சி - இமையாணன் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இமையாணன் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தினுள் நுழைந்த ஆயுததாரிகள், வர்த்தக நிலையத்தை கொள்ளையிடுவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த சந்தேகநபர்களே வாள்களைக் கொண்டு அச்சுறுத்தியுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையத்திலுள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (15) இரவு இடம்பெற்ற இந்த சம்பவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.