பூச்சிகளால் சோள உற்பத்தி பெரிதும் பாதிப்பு

பூச்சிகளால் சோள உற்பத்தி பெரிதும் பாதிப்பு

by Staff Writer 17-11-2018 | 4:22 PM
Colombo (News 1st) நாட்டின் பல மாவட்டங்களிலும் பூச்சிகளினால் சோள உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1575 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கையிடப்பட்ட சோள உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை, மொனராகலை, அநுராதபும் மற்றும் குருநாகலை மாவட்டங்களில் சோள உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சோள உற்பத்தியைத் தவிர, மரக்கறி, பழம், நெற்செய்கையும் பூச்சிகளினால் பாதிக்கப்பட்டுள்ளன.