அரசியலமைப்பின் பிரகாரம் கொண்டுவரப்படும் பிரேரணையில் தோற்றால் எதிர்க்கட்சியில் அமரத் தயார்: கெஹெலிய

by Bella Dalima 17-11-2018 | 9:36 PM
Colombo (News 1st) அரசியலமைப்பின் பிரகாரம் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைந்தால் எதிர்க்கட்சியில் அமரத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.