கஜா புயலால் யாழ். புறநகர் பகுதிகளில் பாதிப்பு

by Staff Writer 16-11-2018 | 4:31 PM
Colombo (News 1st) கஜா புயல் காரணமாக யாழ். புறநகர் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. யாழ். புறநகர் பகுதிகளிலும் நாவாந்துறை பகுதிகளிலும் சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். நீர்வேலி பகுதியில் உள்ள வாழைத்தோட்டங்களும் சேதமடைந்துள்ளன. முல்லைத்தீவு கடற்பரப்பு சற்று கொந்தளிப்பாகக் காணப்படுவதால், மீனவர்களுக்கு அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னாரில் நேற்று (15) இரவு முதல் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மன்னார் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கஜா புயலின் தாக்கத்தினால் திருகோணமலையிலும் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.