MIM நிறுவனத்தில் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

by Staff Writer 15-11-2018 | 8:20 PM
Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் MIM எனப்படும் Maharaja Institute of Management -இல் இலத்திரனியல் ஊடகம் தொடர்பில் டிப்ளொமா பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு இன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு இரத்மலானை - ஸ்டைன் கலையகத்தில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியல் தெரிவு செய்யப்பட்ட 21 இளைஞர், யுவதிகள் இந்த பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மற்றும் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் உபுல் B திசாநாயக்க ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் பெற்றனர். இந்த நிகழ்வில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர்களும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, MIM 2018-இற்கான சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கத்தை அமித்த ஏஷான் வெற்றி கொண்டார்.

ஏனைய செய்திகள்