பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கை நியாயமானது: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 15-11-2018 | 9:11 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கை நியாயமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று தனது விசேட உரையில் குறிப்பிட்டார். இதேவேளை, தற்போதைய பரபரப்பான சூழலில் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை மறக்கக்கூடாது என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.