புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-11-2018 | 6:09 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் சபாநாயகர் எடுத்துள்ள நடவடிக்கை, அந்த வழக்கு விசாரணைக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 02. மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 03. பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து, நிலையியல் கட்டளைக்கு ஏற்ப ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இன்றைய செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் அரசாங்கம் என்று கூறிய குழுவிற்கு இன்று (14) பெரும்பான்மையைக் காண்பிக்க முடியாமல் போனது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். 04. புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கும் வரையில், தற்போதைய பிரதமர் பதவியில் நீடிப்பார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். 05. தனது பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார். 06. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 07. தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை எனக் கூறிய சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று காலை 10 மணி வரை, பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 02. காஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளுக்கும் பலஸ்தீன ஆயுதக்குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்