பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் விசேட உரை

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை

by Staff Writer 15-11-2018 | 6:52 AM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (15) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.