தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்: சஜித் பிரேமதாஸ

by Staff Writer 15-11-2018 | 7:13 PM
Colombo (News 1st) கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடிய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் எனக் கூறினார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த தரப்பிற்கு அரசாங்கத்தைக் கொண்டு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டனர்.