கட்சித் தலைவர்களின் கூட்டம் நிறைவு

கட்சித் தலைவர்களின் கூட்டம் நிறைவு

by Chandrasekaram Chandravadani 14-11-2018 | 9:27 AM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்றுமுன்னர் நிறைவுபெற்றுள்ளது. அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாமல் ராஜபக்ஸ, அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் மனோ கணேசன், உள்ளிட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகைதந்துள்ளனர். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.