ஸ்ரீலங்கன் விமானசேவையின் தலைவர் இராஜினாமா

ஸ்ரீலங்கன் விமானசேவையின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ இராஜினாமா

by Staff Writer 13-11-2018 | 2:35 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ரஞ்சித் பெர்னாண்டோ தனது இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், இராஜினாமாவிற்கான காரணம், கடிதத்தில் குறிப்பிட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.