மட்டக்களப்பில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு

மட்டக்களப்பு - சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு

by Staff Writer 13-11-2018 | 9:21 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கிரான், புனானை, சாலம்பச்சேனை ஆற்றங்கரை பகுதியில் நான்கு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, புனானை - சாலம்பச்சேனை ஆற்றங்கரை பகுதியில் நேற்று (12) மாலை யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் மட்டக்களப்பில் நிலவிய சீரற்ற வானிலையால் புனானை குளம் பெருக்கெடுத்தது. இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதிக்கு சென்ற யானைகள் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.