Colombo (News 1st) உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது,
இன்று மக்களின் இறையாண்மை வெற்றி பெற்றுள்ளது. அரசியல் ஒழுக்கம் ஒரு படி முன்னேறிச் சென்றுள்ளது. உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை நாம் வரவேற்கின்றோம். அரசியலமைப்பை புறந்தள்ளிவிட்டு செயற்பட முடியாதென உயர்நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. இது ஒரு வெற்றி மாத்திரமே, இன்னும் எமது போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். நாம் பாராளுமன்றத்தில் எமது பெரும்பான்மையைக் காண்பிப்போம். பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் அல்ல, ஜனாதிபதியே அறிவித்திருந்தார். அதன்படி, நாளை நாம் பாராளுமன்றம் சென்று எமது பலத்தைக் காண்பிப்போம்.