தில்ஹார ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

தில்ஹார லொக்குஹெட்டிகே ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக ICC குற்றச்சாட்டு

by Staff Writer 13-11-2018 | 7:08 PM
Colombo (News 1st) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தில்ஹார லொக்குஹெட்டிகே ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக ICC குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 10-10 லீக் கிரிக்கெட் போட்டிகளின் போது அவர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் விதிமுறைகளை மீறியதாக தில்ஹார லொக்குஹெட்டிகே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென ICC விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.