அம்பாறையில் பெரும்போகத்திற்கான உரவிநியோகம் ஆரம்பம்

அம்பாறையில் பெரும்போகத்திற்கான உரவிநியோகம் ஆரம்பம்

by Staff Writer 13-11-2018 | 7:46 AM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைகளுக்காக, மானிய அடிப்படையிலான உர விநியோக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கமநல சேவை நிலையங்கள் மூலம் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாக, அம்பாறை மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை 1,24,000 ஏக்கரில் பெரும் போகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென 3 இலட்சத்து 72 அந்தர் உரம் விநியோகிக்கப்படும் எனவும் கமநல சேவை உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.