பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக மனு தாக்கல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக மனு தாக்கல்

by Staff Writer 12-11-2018 | 9:59 AM
Colombo (News 1st) பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சில அரசியல் கட்சிகளும் மேலும் சில குழுக்களும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், 1) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் 2) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் 3) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 4) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரிஷாட் பதியூதின் 5) ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் 6) மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தமது மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அத்தோடு, இவர்கள் தவிர, லால் விஜேநாயக்க, சட்டத்தரணி அநுர லக்சிறி, ஜீ.சி.டி. பெரேரா, ஆர்.ஏ.எஸ்.பி. பெரேரா மற்றும் தேசிய கொள்கையினால் மேலும் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர், பேராசிரியர் இரத்னஜீவன் ஹூல் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.