கெக்கிராவயில் துப்பாக்கிப் பிரயோகம்

கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் துப்பாக்கிச் சூடு

by Staff Writer 12-11-2018 | 1:22 PM
Colombo (News 1st) கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சோமகமகேவினால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கெக்கிராவ பிரதேசசபை தலைவர் சம்பத் ஹேரத் குற்றம் சுமத்துகின்றார். இது தொடர்பில் கெக்கிராவ பிரதேசசபை தலைவரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சோமகமகேவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.