மழையால் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்

மழையினால் செய்கைகளுக்கு உண்டான சேதம் குறித்து தகவல்

by Staff Writer 11-11-2018 | 8:22 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து தகவல் வழங்குமாறு விவசாயிகளிடம் விவசாய அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இழப்புகள் குறித்து பிரதேசத்திலுள்ள விவசாய நிலையத்தில் தகவல்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தொடர்ச்சியாகப் பெய்துவருகின்ற மழையுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், மழை வௌ்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விவசாயிகள் வழங்கும் தகவல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.