மோட்டார்சைக்கிளில் பயணித்த 32 பேர் கைது

ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 32 பேர் கைது

by Staff Writer 11-11-2018 | 10:53 AM
Colombo (News 1st) பிலியந்தலை ஜாலியகொட, கெஸ்பேவ மாற்று வீதியில், ஆபத்தான வகையில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 14 மோட்டார் சைக்கிள்களுடன் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் மேலதிக தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.