மலையக பகுதிகளில் நன்னீர்மீன் உற்பத்தி விஸ்தரிப்பு

மலையகப் பகுதி நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்பத்தி விஸ்தரிப்பு

by Staff Writer 10-11-2018 | 12:06 PM
Colombo (News 1st) மலையகப் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாத்தளை, கண்டி, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள தோட்டங்களின் நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்பத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக, 11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.