மக்களுக்கு சந்தர்ப்பமளிப்பது தலைவர்களின் பொறுப்பு 

மக்கள் தமது நிலைப்பாட்டை வௌிப்படுத்த சந்தர்ப்பமளிப்பது தலைவர்களின் பொறுப்பு: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 10-11-2018 | 7:43 PM
Colombo (News 1st) மக்கள் தமது நிலைப்பாட்டை வௌிப்படுத்துவதற்கு சந்தர்ப்பமளிப்பது தலைவர்களின் பொறுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை வௌிப்படுத்துவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பமளிப்பது அரசியல் தலைவர்களின் பொறுப்பு என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலினூடாக மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து, ஸ்திரமான நாட்டை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என மஹிந்த ராஜபக்ஸவின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.