ஜோர்தானில் வௌ்ளம்: 7 பேர் உயிரிழப்பு

ஜோர்தானில் வௌ்ளம்: 7 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 10-11-2018 | 2:00 PM
ஜோர்தானில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், ஜோர்தானின் புராதான நகரான பெட்ரா (Petra) நகரிலிருந்து சுமார் 4,000 சுற்றுலாப் பயணிகள், வௌியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கு தென் மேற்குப் பகுதியிலுள்ள மடாபா பகுதியில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்த ஐவரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், துறைமுக நகரான அகாபா பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.