கலிபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி ஐவர் உயிரிழப்பு

கலிபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி ஐவர் பலி: 150,000 பேர் வௌியேற்றம்

by Chandrasekaram Chandravadani 10-11-2018 | 7:08 AM
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதோடு, 150,000க்கும் அதிகமானோர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, மாலிபு நகரம் உட்பட்ட கரையோரப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலை வரை பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதேநேரம், சக்ராமென்டோ பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கிய கார் ஒன்றிலிருந்து ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரு பகுதிகளில் பரவும் தீ, கடும் காற்று வீசும் காரணமாக, வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.