கட்டுநாயக்கவில் ஒருதொகை சிகரட்களுடன் இருவர் கைது

கட்டுநாயக்கவில் ஒருதொகை சிகரட்களுடன் இருவர் கைது

by Staff Writer 10-11-2018 | 11:15 AM
Colombo (News 1st) சட்டவிரோதமாக ஒருதொகை சிகரட்களை நாட்டிற்கு கொண்டுவந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேநபர்களிடமிருந்து 41,000 சிகரட்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார். இவற்றின் பெறுமதி சுமார் 20,50,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர்கள் இருவரும் தமது பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்துவைத்து, துபாயிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாரவில மற்றும் கொழும்பை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.