பம்பைமடுவில் உளுந்து உற்பத்தி வலயம்

வவுனியா - பம்பைமடுவில் உளுந்து உற்பத்தி வலயம்

by Bella Dalima 09-11-2018 | 4:49 PM
Colombo (News 1st)  வவுனியா - பம்பைமடு பகுதியில் உளுந்து உற்பத்தியை மேம்படுத்தும் வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வருடாந்தம் 8000 மெட்ரிக் தொன் உளுந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும், உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவித்து உற்பத்தியை மேம்படுத்தும் இந்தத் திட்டத்தினூடாக இறக்குமதியை குறைத்துக்கொள்ள முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 16,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள உளுந்து வலயத்தில் பயிரிடத் தேவையான உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.