கால்நடைப் பண்ணைகளை விஸ்தரிக்க நடவடிக்கை

இரத்தினபுரியில் கோழி, ஆட்டுப் பண்ணைகளை விஸ்தரிக்க நடவடிக்கை

by Bella Dalima 09-11-2018 | 4:57 PM
Colombo (News 1st) இரத்தினபுரி மாவட்டத்தில் பண்ணைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை சப்ரகமுவ மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இதனூடாக கோழி, ஆட்டுப் பண்ணைகளை அபிவிருத்தி செய்தற்கு நடடிக்கை எடுத்துள்ளாக திணைக்களத்தின் இரத்தினபுரி மாவட்ட பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதன் பிரகாரம், கால்நடைகளை கொள்வனவு செய்வற்கு 50 வீத சலுகை வழங்கப்படவுள்ளதுடன், ஆரம்பக் கட்டணமாக 306 பண்ணையாளர்களுக்கு 3060 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளதாக டி.பி.டி.ஜே. ஹேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.