வவுனியாவில் முதலை ஒன்று மீட்பு

வவுனியா - நாகர் இலுப்பைக்குளத்திலிருந்து முதலை ஒன்று மீட்பு

by Staff Writer 08-11-2018 | 2:07 PM
Colombo (News 1st) வவுனியா - நாகர் இலுப்பைக்குளத்திலிருந்து முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 10 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றே குறித்த பகுதியில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை நாகர் இலுப்பைக்குள வீதியில் குறித்த முதலையை அவதானித்த மக்கள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, குறித்த பகுதிக்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முதலையைப் பிடித்து, மன்னார் - மடு வனஜீவராசிகள் திணைக்கள சரணாலயத்திற்குள் விடுவித்தாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.