by Staff Writer 08-11-2018 | 2:32 PM
Colombo (News 1st) அரிசிமா தயாரிப்புக்களை சந்தைக்கு விநியோகிக்கும் வீதத்தை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவுப்பண்டங்களுக்கு பதிலாக அரிசிமாவைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், அரிசிமாவினால் தயாரிக்கப்படும் உணவுப்பண்டங்களை விற்பனை செய்வது தொடர்பில் வெதுப்பக உரிமையாளர்களை ஊக்குவிக்கும் பல்வேறு செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.