நாலக்க டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்

நாலக்க டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 07-11-2018 | 5:22 PM
Colombo (News 1st)  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மீதான கொலைச்சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா, கடந்த மாதம் 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.