கிளிநொச்சி வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி

by Staff Writer 07-11-2018 | 6:53 AM
Colombo (News 1st) கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி, ஏ - 9 வீதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டியுமே மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றைய இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.