புதிய அமைச்சர்கள் இருவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்
by Staff Writer 07-11-2018 | 2:00 PM
Colombo (News 1st) புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவர் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
மேல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக தினேஸ் குணவர்தன, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மேல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இதேவேளை, இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.