வண்ணத்துப்பூச்சியாக இருப்பது சிறந்தது

அட்டையாக இருப்பதை விட வண்ணத்துப்பூச்சியாக இருப்பது சிறந்தது: ஜனாதிபதிக்கு மங்கள பதில்

by Bella Dalima 06-11-2018 | 7:53 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (05) நடைபெற்ற மக்கள் பேரணியில் தெரிவித்த கருத்திற்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் பதிலளித்துள்ளனர். ஜனாதிபதிக்கு தம்முடன் காணப்படும் தனிப்பட்ட பிரச்சினை எவ்வாறானதாக இருந்தாலும், சட்டவிரோத மற்றும் ஒழுக்க ரீதியற்ற முறையில் அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தி, தம்மை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த மக்களை பணையக் கைதிகளாக்கி, நாட்டைப் படுகுழியை நோக்கி அவர் இட்டுச்செல்வதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   இதேவேளை, அட்டையாக இருப்பதை விட வண்ணத்துப்பூச்சியாக இருப்பது சிறந்தது என மங்கள சமரவீர தமது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.