அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க. பேரணி

புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க. பேரணி

by Staff Writer 05-11-2018 | 9:40 AM
Colombo (News 1st) புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்த பேரணி ஒன்று இன்று (05) மாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் பேரணி கோட்டை ரயில் நிலையத்தற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக மக்களின் பலத்தைக் கைப்பற்றி பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.