கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சர்கள்

கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சர்கள்

by Staff Writer 05-11-2018 | 1:19 PM
Colombo (News 1st) புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் சிலர் இன்று தமது கடமைகளைப்  பொறுப்பேற்றுள்ளனர். அந்தவகையில், கலாசாரம், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன, வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் அஷோக்க ப்ரியந்த, கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மற்றும் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.