ஐ.நா செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

பிரதமர் நியமனம் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

by Staff Writer 02-11-2018 | 5:28 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டேரஸூடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் இதன் போது ஐ.நா செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பிரதமர் நியமனம் இலங்கை அரசியலமைப்பிற்கு அமைய வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி இதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.