பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கே ஆதரவு

பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கே ஆதரவு, எந்தவொரு தரப்பினருக்குமல்ல: மக்கள் விடுதலை முன்னணி

by Staff Writer 02-11-2018 | 4:03 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கே தமது கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும் வேறு எந்த தனி நபருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவு வழங்குவதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். இதன் பிரகாரம், எந்தவொரு தரப்பினருக்கும் தமது கட்சி ஆதரவு வழங்காது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  

ஏனைய செய்திகள்