by Bella Dalima 01-11-2018 | 8:09 PM
Colombo (News 1st) புதிதாக 2 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 5 இராஜாங்க அமைச்சர்களும் 6 பிரதி அமைச்சர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் இன்றிரவு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
1. துமிந்த திசாநாயக்க - நீர்பாசனம், நீரியல் வளம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
2. தயாசிறி ஜயசேகர - திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
3. பியசேன கமகே - இளைஞர், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
4. லக்ஷ்மன் செனவிரட்ன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
5. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா- பெருந்தெருக்கள் மற்றும் வீதிஅபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
6. மொஹான் லால் கிரேரு - கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்
7. சிரியாணி விஜேவிக்ரம - உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்
8. அங்கஜன் ராமநாதன் - விவசாய பிரதி அமைச்சர்
9. மனுஷ நாணயக்கார - தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்
10. இந்திக பண்டாரநாயக்க - வீடுகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
11. சாரதி துஷ்மந்த - நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு பிரதி அமைச்சர்
12. நிஷாந்த முத்துஹெட்டிகம - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர்
13. காதர் மஸ்தான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.