தீர்வு வழங்கப்படாவிடின் பதவியைத் துறப்பேன் 

1000 ரூபா சம்பளக் கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படாவிடின் பதவியைத் துறப்பதாக ஆறுமுகம் தொண்டமான் தெரிவிப்பு

by Bella Dalima 26-10-2018 | 3:56 PM
Colombo (News 1st) எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படாவிடின், தமது பாராளுமன்ற பதவியை துறக்கவுள்ளதாக ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.