ரவி கருணாநாயக்கவின் வீட்டின் மேல் பறந்த ட்ரோன்

ரவி கருணாநாயக்கவின் வீட்டின் மேல் பறந்த ட்ரோன்: விசாரணைகள் முன்னெடுப்பு

by Bella Dalima 26-10-2018 | 4:13 PM
Colombo (News 1st) பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டின் மேலாகவும் வீட்டை அண்மித்த பகுதிகளிலும் ட்ரோன் கெமராவைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்தமை தொடர்பிலான விசாரணைக்காக மூவர் தலங்க பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வன பாதுகாப்புத் திணைக்களத்தின் திட்டமொன்றுக்காக குறித்த காணொளி ஔிப்பதிவு செய்யப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், காணொளி ஔிப்பதிவு தொடர்பில் அவர்கள் சிவில் விமான ​சேவை அதிகார சபையின் அனுமதியைப் பெறவில்லை என்பதுடன், தமக்கும் அறிவிக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக வன பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் ட்ரோன் கெமராவின் உரிமையாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.