காலியில் 750,000 கறுவாக் கன்றுகள் பகிர்ந்தளிப்பு

காலி மாவட்டத்தில் கறுவா செய்கை: தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா 50 கறுவாக் கன்றுகள் விநியோகம்

by Staff Writer 26-10-2018 | 7:19 PM
Colombo (News 1st)  காலி மாவட்டத்தில் கறுவா செய்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினூடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா 50 கறுவா கன்றுகள் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், இதுவரை 750,000 கறுவாக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.