by Staff Writer 25-10-2018 | 1:24 PM
Colombo (News 1st) இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு இன்று (25) அத்தாட்சிப்படுத்தப்படுகின்றது.
இதன்பின்னர் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு இந்த வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்ட மேன்முறையீட்டு காலப்பகுதியில், சுமார் 85,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.