மீண்டும் இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

மீண்டும் இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

by Staff Writer 25-10-2018 | 1:53 PM
Colombo (News 1st) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவில் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பு - வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.