புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 25-10-2018 | 5:47 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. எந்தவொரு அரசியல் பின்புலமும் இன்றி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் நேற்று (24) மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. 02. வட மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்தது. 03. தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் பயப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். 04. தென் கிழக்குப் பல்கலைக்கழகம் நேற்று (24) முதல் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 05. அடுத்த வருடத்தில் தரம் ஒன்றில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் ஆவணங்களில் பதிவுசெய்யும்போது மாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. நியூயோர்க்கின் டைம் வோர்னர் கட்டடத்தில் அமைந்துள்ள CNN செய்தி ஊடக நிறுவனத்தின் தலைமை காரியாலயத்திற்கு, சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்று கிடைக்கப்பெற்றதாக அதன் தலைவர் ஜெப் சுக்கர் தெரிவித்துள்ளார். 02. ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் தொடர்புடைய அடையாளம் காணப்பட்ட சவுதி அரேபிய அதிகாரிகளின் விசாக்கள் இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்தி 01. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸ்களில், 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக இந்தியாவின் விராத் கொஹ்லி பதிவாகியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்திய அதேவேளை, இதில் இரு அணிகளும் தலா 321 ஓட்டங்களைக் குவிக்க ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.